செய்திகள்
அல்லாளசேரி கிராமத்தில் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
அல்லாளசேரி கிராமத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால் தாசில்தார் ரவி தலைமையில், வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கலவை:
கலவை தாலுகா, அல்லாளசேரி கிராமத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால் தாசில்தார் ரவி தலைமையில், வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
அப்போது வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர் மற்றும் உதவியாளர்கள் காய்ச்சல், சளி உள்ளவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.