செய்திகள்
கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு முககவசங்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு முககவசங்கள் வழங்கப்பட்டன. இதில், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.