செய்திகள்
கொரோனா வைரஸ்

குமாரபாளையத்தில் வஜ்ரா வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

Published On 2020-08-12 15:54 GMT   |   Update On 2020-08-12 15:54 GMT
குமாரபாளையத்தில் வஜ்ரா வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.
குமாரபாளையம்:

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி ஏற்கனவே குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகள் அடைக்கப்பட்டது. குமாரபாளையத்தில் இதுவரை 63 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் துறைக்கு சொந்தமான வஜ்ரா வாகனம் மூலம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட சேலம் மெயின் ரோடு, எடப்பாடி ரோடு, பள்ளிபாளையம் ரோடு போன்ற முக்கிய சாலைகளில் 12 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோ குளோரைடு கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News