செய்திகள்
கொள்ளை

கடையின் பூட்டை உடைத்து பணம், காய்கறிகள் திருட்டு

Published On 2020-08-09 00:16 GMT   |   Update On 2020-08-09 00:16 GMT
கடையின் பூட்டை உடைத்து பணம், காய்கறிகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதிலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 42). இவர், கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய ரெயில்வே சுரங்கபாதையோரம் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க எட்டியப்பன் சென்றார். அப்போது கடையின் இரும்புக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் பூண்டு, உருளைகிழங்கு மூட்டை, பீன்ஸ் மூட்டைகள் மற்றும் மசாலா பாக்கெட்டுகள் ஆகிவற்றை அள்ளிச்சென்றனர்.

இதுபற்றி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News