செய்திகள்
கொரோனா வைரஸ்

பழனி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-08 12:00 GMT   |   Update On 2020-08-08 12:00 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழனி:

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான செந்தில்குமார் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அமைச்சர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News