செய்திகள்
வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 34). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் எசனையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து அவர் நேற்று காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 34). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் எசனையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து அவர் நேற்று காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.