செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப்பணிகள்- முதலமைச்சர் ஆய்வு

Published On 2020-08-07 05:27 GMT   |   Update On 2020-08-07 05:27 GMT
நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

இதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

கொரோனா பொதுமுடக்கத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ரூ.1000 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் தாமதத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணியே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News