செய்திகள்
கோப்புபடம்

உளுந்தூர்பேட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

Published On 2020-08-06 13:24 GMT   |   Update On 2020-08-06 13:24 GMT
உளுந்தூர்பேட்டை உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் உளுந்தூர்பேட்டை-திருச்சி சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் உளுந்தூர்பேட்டை-திருச்சி சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை  மேற்கொண்டார். அப்போது சில கடைகளில் தமிழக அரசால்தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து சுமார் 60 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்சி சாலையில் உள்ள 3 ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கினார்.
Tags:    

Similar News