செய்திகள்
வழக்கு பதிவு

விதிமுறைகளை மீறிய 1,497 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

Published On 2020-08-05 12:32 GMT   |   Update On 2020-08-05 12:32 GMT
விதிமுறைகளை மீறிய 1,497 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வெள்ளகோவில்:

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகர் மற்றும் கிராம பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு விதி மீறல், சமூக இடைவெளி, முககவசம் அணியாதது, கிருமி நாசினி பயன்படுத்தாதது உள்பட 1,497 பேர் மீது வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News