செய்திகள்
கோப்புபடம்

சிவகிரி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Published On 2020-08-05 10:11 GMT   |   Update On 2020-08-05 10:11 GMT
சிவகிரி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி. இவரது மனைவி ஜோதி (வயது 55). இவர்களுக்கு, மகனும், மகளும் உண்டு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மகன் வசித்து வருகிறார். திருமலைச்சாமி, அவரது மகள் இறந்து விட்டனர். இதனால் ஜோதி மட்டும் சிவகிரியில் தனியாக வசித்து வந்தார். ஆதரவற்றோர் உதவித்தொகை பெற்று அவர் வாழ்க்கை நடத்தி வந்தார்.

தற்போது கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ஜோதி தனிமையில் தவித்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜோதி சிவகிரி அருகே விசுவநாதபேரி வடக்கு சத்திரம் இடையே உள்ள ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News