செய்திகள்
கோப்புபடம்

நாமக்கல்லில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-08-05 08:05 GMT   |   Update On 2020-08-05 08:05 GMT
நாமக்கல்லில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்தவர் தர்மாம்பாள் (வயது 48). கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை பிரிந்து சென்ற தர்மாம்பாள், தேவக்குமார் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு கோகுலகண்ணன் (19) என்ற மகன் இருந்து வந்தான். இந்த நிலையில் கோகுலகண்ணன், மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக நேற்று தர்மாம்பாள் சென்று விட்டார். இதற்கிடையே தனது தாயாரை போனில் தொடர்பு கொண்ட கோகுலகண்ணன், தனக்கு வாழ பிடிக்கவில்லை, எங்காவது சென்று விடுகிறேன் என கூறி உள்ளார். சந்தேகம் அடைந்த தர்மாம்பாள், மகனின் நண்பனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து, வீட்டுக்கு சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் கோகுலகண்ணன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். இங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோகுலகண்ணன் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News