செய்திகள்
கைது

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற என்ஜினீயர் கைது

Published On 2020-08-03 10:59 GMT   |   Update On 2020-08-03 10:59 GMT
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளை திருட முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 33). இவர் குளித்தலை ஆண்டாள் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்துள்ளார். தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்க சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருட முயன்றார். இதையடுத்து கோவிந்தராஜ் தனது சகோதரருடன் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தினேஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News