செய்திகள்
முககவசம் அணியாத 67 பேருக்கு அபராதம்
மொரப்பூரில் முககவசம் அணியாத 67 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மொரப்பூர்:
மொரப்பூர் பகுதியில் அரூர் மண்டல துணை தாசில்தார் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், விமலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாக்ரடீஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயன், அகிலன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் அந்த பகுதியில் சென்ற 67 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.