செய்திகள்
ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9 பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 11,148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,953 இரு சக்கர வாகனங்கள், 91 கார்கள், 114 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.