செய்திகள்
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை தியாகராய நகரில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தியாகராய நகரில் வி.எச்.பி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகர் பாதுகாப்பு பணியில் இருந்ததாகவும், அப்போது திடீரென சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் தொடர்பாக வி.எச்.பி. அலுவலகத்திற்கு விரைந்த சென்ற போலீசார் தற்கொலை செய்து கொண்ட காவலர் சேகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.