செய்திகள்
தற்கொலை

சின்னசேலம் அருகே விவசாயி தற்கொலை

Published On 2020-07-26 11:05 GMT   |   Update On 2020-07-26 11:05 GMT
சின்னசேலம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:

சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமம், புது காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 55) விவசாயி. இவருக்கு காலில் நீர்கட்டி ஏற்பட்டு அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று காலில் அதிக வலி ஏற்பட்டதால் தாங்க முடியாமல் தங்கராஜ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News