செய்திகள்
4 ஊழியர்களுக்கு கொரோனா - ராஜபாளையம் யூனியன் அலுவலகம் மூடல்
ராஜபாளையம் யூனியன் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அலுவலகம் மூடப்பட்டது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் யூனியன் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது. அலுவலகம் வந்திருந்த 16 பேருக்கு ஜமீன்கொல்லங்கொண்டான் சுகாதார மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களுக்கான முடிவு வெளியானவுடன் அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் யூனியன் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது. அலுவலகம் வந்திருந்த 16 பேருக்கு ஜமீன்கொல்லங்கொண்டான் சுகாதார மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களுக்கான முடிவு வெளியானவுடன் அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.