செய்திகள்
விழுப்புரத்தில் ஆதரவற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள்
விழுப்புரத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள், முதியவர்கள் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம்:
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள், முதியவர்கள் 100 பேருக்கு விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வள்ளலார் அருள்மாளிகை மேனேஜிங் டிரஸ்டி அண்ணாமலை, நிர்வாகிகள் கலியபெருமாள், பலராமன், பாரதி, ராமலிங்கம், அழகானந்தம், பன்னீர்செல்வம், வேல்முருகன், அருளரசு, சிவக்குமார், வாசுதேவன், சிவகாமி, சரவணன், சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.