செய்திகள்
கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ விவகாரம்- குகன், சோமசுந்தரத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது
சென்னை:
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்தர் என்பவர் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த குகன், சோமசுந்தரம் ஆகிய மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொடர்பான விசாரணை போலீசார் மேற்க்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரம் ஆகிய இருவரையும் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொடர்பாக கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரத்திற்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கருப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்தர், மற்றும் செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி மனு செய்துள்ளனர். அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை நடைபெறுகிறது
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்தர் என்பவர் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த குகன், சோமசுந்தரம் ஆகிய மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொடர்பான விசாரணை போலீசார் மேற்க்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரம் ஆகிய இருவரையும் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொடர்பாக கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரத்திற்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கருப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்தர், மற்றும் செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி மனு செய்துள்ளனர். அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை நடைபெறுகிறது