செய்திகள்
தபால் நிலைய ஊழியர் தாக்குதல்- போலீசார் விசாரணை
திருவட்டார் அருகே தபால் நிலைய ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே தெங்கம்பழஞ்சிவிளையை சேர்ந்தவர் ஜெஸ்டின் (வயது 39). இவர் காட்டத்துறை துணை தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டின் அருகில் அதே பகுதியை சேர்ந்த சுபின், விஜயராகவன், சுனில் ஆகியோர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை ஜெஸ்டின் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சுபின் உள்பட 3 பேரும் ஜெஸ்டினை கம்பால் தாக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை உள்பட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபின் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
திருவட்டார் அருகே தெங்கம்பழஞ்சிவிளையை சேர்ந்தவர் ஜெஸ்டின் (வயது 39). இவர் காட்டத்துறை துணை தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டின் அருகில் அதே பகுதியை சேர்ந்த சுபின், விஜயராகவன், சுனில் ஆகியோர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை ஜெஸ்டின் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சுபின் உள்பட 3 பேரும் ஜெஸ்டினை கம்பால் தாக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை உள்பட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபின் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.