செய்திகள்
மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி
மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே உள்ள கந்தன்கொட்டாயை சேர்ந்த முனுசாமி மகள் சுதர்சனா(வயது 8), வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டாள். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாள். சிறுமி உயிரிழப்பு குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.