செய்திகள்
பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சிறையில் வாடும் அறிஞர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-18 14:21 GMT   |   Update On 2020-07-18 14:21 GMT
தஞ்சை ரெயில் நிலையம் அருகே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை ரெயில் நிலையம் அருகே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அயனாவரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரை.மதிவாணன் வரவேற்றார். தமிழ்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்தமைக்காக, சிறையில் அடைக்கப்பட்டு, இருதய நோயால் உயிருக்கு போராடும் எழுத்தாளர் வரவரராவ் மற்றும் 21 மாதங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அறிஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News