செய்திகள்
மின்சார நிறுத்தம்

திருவண்ணாமலையில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-07-17 15:53 GMT   |   Update On 2020-07-17 20:29 GMT
திருவண்ணாமலையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, ஆடையூர், அடிஅண்ணாமலை, தேவனந்தல், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, வள்ளிவாகை, வடஆண்டாப்பட்டு, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் மற்றும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News