செய்திகள்
தற்கொலை

தேர்வில் தோல்வியடைந்த பிளஸ்-2 மாணவர் தற்கொலை

Published On 2020-07-17 09:48 GMT   |   Update On 2020-07-17 09:48 GMT
வேடசந்தூர் அருகே தேர்வில் தோல்வியடைந்த பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த துரைசாமி மகன் செல்வராஜ் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த செல்வராஜ், நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News