செய்திகள்
சேலத்தில் புதிய மேம்பாலத்தை திறந்துவைத்த முதலமைச்சர்

சேலத்தில் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2020-07-15 12:35 GMT   |   Update On 2020-07-15 12:35 GMT
சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சேலம்:

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.33 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த புதிய பாலத்தால் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர்.

பேளூர்-கிளாக்காடு பகுதியில் ரூ.3.27 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் திறந்து வைத்து அவர் கூறியதாவது:

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும். நோய் பரவலை தடுக்க பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News