செய்திகள்
மருத்துவ முகாம்

காய்ச்சல் பரிசோதனை முகாம்

Published On 2020-07-15 11:32 GMT   |   Update On 2020-07-15 11:32 GMT
வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டுநீரேத்தானில் கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது.
வாடிப்பட்டி:

வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டுநீரேத்தானில் கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமிற்கு செயல் அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் பிச்சைமுத்து முன்னிலை வகித்தார். சுகாதார பணி மேற்பார்வையாளர் காமாட்சி வரவேற்றார். இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் பாண்டியன் தலைமையில் டாக்டர் ஹேமலதா, செவிலியர் சுகந்தி, கிராம சுகாதார செவிலியர் முருகேஸ்வரி ஆகியோர் காய்ச்சல் மற்றும் ரத்த பரிசோதனை செய்தனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News