செய்திகள்
கைது

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 5 பேர் கைது

Published On 2020-07-15 10:58 GMT   |   Update On 2020-07-15 10:58 GMT
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 10,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,883 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,934 இரு சக்கர வாகனங்கள், 85 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள், மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட போதிலும் விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

தென் மாவட்டத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்துக்கு பிறகு போலீசார் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டும் நிலை உள்ளதாக கருத்து தெரிவித்த மாவட்ட உயர் அதிகாரி ஒருவர், நியாயமான நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மக்கள் எப்போதுமே துணை நிற்பார்கள் என்பதால் விதிகளை மீறுவோர் மீது போலீசார் தயக்கம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:    

Similar News