செய்திகள்
கைது

ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2020-07-15 07:41 GMT   |   Update On 2020-07-15 07:41 GMT
கிருஷ்ணகிரி அருகே ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சந்தைபேட்டை பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த பெண்ணை நிறுத்தி, வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து, அந்த வாகனத்தை கஞ்சாவுடன் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட பெண்ணிடம் அவர் யார்? அவருக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அந்த பெண் மகராஜகடை அருகே உள்ள மாதினாவூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சுமா (வயது 25) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல் சூளகிரி போலீசார் கீழ்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைத்துக்கொண்டு நின்றிருந்த கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ராணி (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News