செய்திகள்
களியக்காவிளை பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
குமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
களியக்காவிளை:
குமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் 45 வயது பெண் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் தெரிய வந்தது. இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் யேசுபாலன், இளநிலை உதவியாளர்கள் சுதர்சிங், கனகசபாபதி உள்ளிட்ட 30 பணியாளர்களிடமிருந்து இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் 45 வயது பெண் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் தெரிய வந்தது. இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் யேசுபாலன், இளநிலை உதவியாளர்கள் சுதர்சிங், கனகசபாபதி உள்ளிட்ட 30 பணியாளர்களிடமிருந்து இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.