செய்திகள்
சைக்கிளை திருடும் காட்சி.

நூதன முறையில் சைக்கிளை திருடிச் செல்லும் நபர்கள்- சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Published On 2020-07-11 09:29 GMT   |   Update On 2020-07-11 09:29 GMT
மதுரை திருமலைநாயக்கர் மஹால் சாலையில் உள்ள வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை 2 பேர் நூதன முறையில் திருடிச் சென்றுள்ளனர்.
மதுரை:

மதுரை திருமலைநாயக்கர் மஹால் சாலையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை 2 பேர் திருடிச் சென்றனர்.

தங்களுடைய சைக்கிளை நிறுத்தி விட்டு ஓய்வு எடுப்பது போல நடித்த அவர்கள், சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடிச் சென்றனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை தொடர்ந்து அவற்றை வைத்து 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  
Tags:    

Similar News