செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ராணிப்பேட்டையில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

Published On 2020-07-11 08:13 GMT   |   Update On 2020-07-11 08:13 GMT
ராணிப்பேட்டையில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
சிப்காட்(ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், எழுத்தர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர், ஒரு எழுத்தர் என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீசாருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ராணிப்பேட்டை போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. 
Tags:    

Similar News