செய்திகள்
கோப்புபடம்

திருச்செங்கோடு அருகே சூதாடிய 21 பேர் கைது - 3 கார்கள் பறிமுதல்

Published On 2020-07-10 08:45 GMT   |   Update On 2020-07-10 08:45 GMT
திருச்செங்கோடு அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4¾ லட்சம், 7 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே உள்ள சடையகவுண்டம்பாளையம் பெரிய தோட்டம் பகுதியில் சிலர் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், சிறப்பு பிரிவு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்செங்கோடு, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காமராஜ் (வயது 43), அசோகன் (36), அங்கப்பன் (42), செந்தில்குமார் (42), பாஸ்கரன் (49) உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.4 லட்சத்து 76 ஆயிரம், 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News