செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

மதுரையில் இன்று 310 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-09 03:13 GMT   |   Update On 2020-07-09 03:13 GMT
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 310 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,367 ஆக உள்ளது.
மதுரை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 5,057 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,367 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1,160 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 86 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News