செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா- 4 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் பலியாகினர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,419 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,435 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரை சேர்ந்த 65 வயது நபர், சாயல்குடி பகுதியை சேர்ந்த 55 வயது நபர், பரமக்குடியை சேர்ந்த 68 வயது நபர், 70 வயது நபர் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,419 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,435 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரை சேர்ந்த 65 வயது நபர், சாயல்குடி பகுதியை சேர்ந்த 55 வயது நபர், பரமக்குடியை சேர்ந்த 68 வயது நபர், 70 வயது நபர் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.