செய்திகள்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

கொரோனா பாதிப்பை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறது மத்திய குழு

Published On 2020-07-07 07:34 GMT   |   Update On 2020-07-07 07:34 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், கொரோனா தொற்றால் உயிரிழப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு சென்னை வர உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய குழு நாளை மாலை சென்னை வர உள்ளது. இந்த குழுவினர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வர உள்ளனர். 

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான இந்த குழு, தமிழகத்தில் தொற்று பரவல்,  கொரோனா தொற்றால் உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது. 

அத்துடன் கொரோனா நிலவரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் ஆகியோருடன் மத்திய குழு ஆலோசனை மேற்கொள்கிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 1.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1571 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News