செய்திகள்
அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 27), எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள ஒருவர் வீட்டில் மின்சார பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரதீப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அருகே மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 27), எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள ஒருவர் வீட்டில் மின்சார பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரதீப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.