செய்திகள்
கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது விற்ற 14 பேர் கைது

Published On 2020-07-06 10:20 GMT   |   Update On 2020-07-06 10:20 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் மது விற்ற 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவிற்பனை செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 232 மதுபாட்டில்களையும், ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News