செய்திகள்
கைது

பெரியகுளம் அருகே பெட்டிக்கடையில் திருட்டு: 2 வாலிபர்கள் கைது

Published On 2020-07-05 13:00 GMT   |   Update On 2020-07-05 13:00 GMT
பெரியகுளம் அருகே பெட்டிக்கடையில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம், தாசில்தார் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 49). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.600 மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பிரதாப்சிங்(18), பாண்டிமணிகண்டன்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News