செய்திகள்
தற்கொலை

வெவ்வெறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2020-07-05 09:51 GMT   |   Update On 2020-07-05 09:51 GMT
வெவ்வெறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:

பெரியகுளம், ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம்(வயது 30). இவருக்கும் செம்பட்டியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கவுசல்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகா விசாரணை செய்து வருகிறார்.

இதேபோல போடி புதூர் போயன்துறை சாலை பகுதியை சேர்ந்த கருப்பு மகன் பிரபாகரன் (21). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிரபாகரன் வீட்டு தாழ்வாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News