செய்திகள்
நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்- ராதாகிருஷ்ணன்
நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா விவகாரத்தில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 39,590 தெருக்களில் 9 ஆயிரம் தெருவில் பாதிப்பு இருந்த நிலையில் 8 ஆயிரமாக குறைந்துள்ளது.
நோய் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
பேட்டியின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடன் இருந்தார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா விவகாரத்தில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 39,590 தெருக்களில் 9 ஆயிரம் தெருவில் பாதிப்பு இருந்த நிலையில் 8 ஆயிரமாக குறைந்துள்ளது.
நோய் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
பேட்டியின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடன் இருந்தார்.