செய்திகள்
சென்னையில் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
சென்னையில் கடந்த 5 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு பதிவான நிலையில், இன்று 1,842 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,385ல் இருந்து 1,450 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 5 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு பதிவான நிலையில் இன்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,385ல் இருந்து 1,450 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 5 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு பதிவான நிலையில் இன்று குறைந்துள்ளது.