செய்திகள்
மல்லூரில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி
மல்லூரில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனமரத்துப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகப்பட்டி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 40). கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் இவர் மொபட்டில் மல்லூருக்கு வந்து மீண்டும் ராசிபுரம் செல்வதற்காக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் செல்லதுரை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகப்பட்டி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 40). கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் இவர் மொபட்டில் மல்லூருக்கு வந்து மீண்டும் ராசிபுரம் செல்வதற்காக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் செல்லதுரை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.