செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் முருங்கைகாய்களை பறித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார வயர் மீது கை பட்டு ஜெயலட்சுமியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் முருங்கைகாய்களை பறித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார வயர் மீது கை பட்டு ஜெயலட்சுமியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.