செய்திகள்
தொழிலாளர்கள் முககவசம் அணியாததால் 3 நிறுவனங்களுக்கு அபராதம்
தொழிலாளர்கள் முககவசம் அணியாததால் 3 நிறுவனங்களுக்குஅபராதம் விதிக்கப்பட்டது.
வெள்ளியணை:
உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் முககவசம் அணிந்து வேலை செய்கிறார்களா? என்று பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில் பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கற்றாழை பால் காய்ச்சும் தொழில் நிறுவனம், ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் தைக்கும் தொழில் நிறுவனம், அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலரும் முககவசம் அணியாமல் வேலை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 3 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது.
உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் முககவசம் அணிந்து வேலை செய்கிறார்களா? என்று பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில் பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கற்றாழை பால் காய்ச்சும் தொழில் நிறுவனம், ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் தைக்கும் தொழில் நிறுவனம், அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலரும் முககவசம் அணியாமல் வேலை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 3 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது.