செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

வன்கொடுமை செய்து படுகொலை - அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Published On 2020-07-02 14:09 GMT   |   Update On 2020-07-02 14:09 GMT
வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு 5 லட்சம் ருபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News