செய்திகள்
திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனை

திருவாரூர் மாவட்டத்தில் பஸ்கள் ஓடவில்லை- சாலைகள் வெறிச்சோடின

Published On 2020-07-02 11:44 GMT   |   Update On 2020-07-02 11:44 GMT
திருவாரூர் மாவட்டத்தில் பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருவாரூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5-வது கட்ட ஊரடங்கு கடந்த மாதம் 30-ந்தேதி வரை நீடித்தது. இதனையடுத்து 6-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து வருகிற 15-ந்தேதி வரை தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து திருவாரூர் மாவட்ட எல்லையான கானூர் சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் பஸ் போக்குவரத்து இல்லாததால் வேலைக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவும், சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாகவும் காணப்பட்டது. பொதுமக்களின் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 
Tags:    

Similar News