செய்திகள்
டிரைவர் தற்கொலை

சேலத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2020-07-01 12:27 GMT   |   Update On 2020-07-01 12:27 GMT
சேலத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மன்னார்பாளையம் பிரிவு ரோட்டை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 51), ஆட்டோ டிரைவர். மேலும் ஏலச்சீட்டு நடத்தி வரும் இவர் சிலருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இவரிடம் பணம் வாங்கியவர்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி அதைத்திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுந்தரம் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News