செய்திகள்
மின்சார நிறுத்தம்

அக்கலாம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-07-01 11:01 GMT   |   Update On 2020-07-01 11:01 GMT
அக்கலாம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட முசிறி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில், அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல்புதூர், கொட்டாம்பட்டி, நாய்க்கடி புதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசபாளையம், மாரப்பநாய்க்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கிபாளையம், புத்தூர், வேப்பமரத்து புதூர், மணிக்கட்டி புதூர், கணக்கம் பாளையம், சிங்கலிபட்டி, பொமம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரி பாளையம், சின்ன தளிகை, தட்டரா பாளையம் மற்றும் சுப்பநாயக்கனூர் பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை திருச்செங்கோடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் டி.பானுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News