செய்திகள்
விபத்து பலி

திருச்செங்கோடு அருகே கார் மோதி விவசாயி பலி

Published On 2020-07-01 10:43 GMT   |   Update On 2020-07-01 10:43 GMT
திருச்செங்கோடு அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே உள்ள கந்தம்பாளையத்தை அடுத்த ராமதேவம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 60), விவசாயி. இவர் தனது உறவினர் வீட்டு விருந்தில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மாணிக்கம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். ராயர்பாளையம் அருகே சென்ற போது, அந்த வழியாக நாமக்கல்லில் இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்லப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், திருச்செங்கோடு புறநகர் போலீசார் அங்கு விரைந்து வந்து செல்லப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News