செய்திகள்
புகையிலை பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் குலாலர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருப்பதாக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக நவநீதகிருஷ்ணன் (வயது 36), அய்யனார் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கணேசன் (49) என்பவரை கைது செய்தனர்.